ஆனி மாத தேரோட்டத்தையொட்டி வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை நகரத்தின் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில், இந்த மாதம் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் – பாகம் 3