பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம், தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்ளைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளதாவது:
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 ஊக்கத்தொகை திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை மாதம் 17-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கால்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு