நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், இதற்காக சுமார் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நயன்தாராவின் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அவரின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் மாதம் 9-ந் தேதி திருப்பதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நயன்தாரா கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், நயன்தாரா ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவில் 6 மாத காலம் அவர் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது உடல் இளைத்து மிகவும் ஒல்லியாக காணப்படும் நயன்தாரா, முன்பு போலவே தனது உடலை பொலிவுபடுத்த முடிவு செய்துள்ளார். அதற்காகவே இந்த சிகிச்சை என்றும் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்தப் பின்னர் புதுப்பொலிவுடன் நயன்தாரா அவர்கள் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.