Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியா – நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியா – நேபாள நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

    புத்தா் பிறந்த தினமானது புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க நேபாளம் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்ற மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேசினார்.

    லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். புத்த மத கலாச்சார பாரம்பரிய மையத்திற்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.

    புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளம் சென்றார். அங்குள்ள மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிப்பட்ட அவர், புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார்.

    பின்னர், நேபாளத்துடன் 6 முக்கிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து புத்த துறவிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, நேபாளத்தின் நட்பு வலுப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்.

    நேபாளத்தில் உள்ள லும்பினிக்குப் பிரதமர் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட / பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன:

    1. புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    2. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    3. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    4. சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    5. இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம்.

    6. அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்.

    மேலும், புத்த பகவான் மீது நமது இரு நாடுகளின் பக்தியும், நம்பிக்கையும் நம்மை ஒரே இழையில் இணைக்கிறது. அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஆக்குகிறது. தியாகம் செய்வதன் மூலமே நாம் சிறப்பை அடைய முடியும் என்பதற்கு புத்தர் உதாரணம். புத்தர் தனக்கு கிடைத்த ஞானத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்தினார். நான் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டாம், ஆராய்ந்து உணருங்கள் என புத்தர் கூறினார். இவ்வாறு மோடி பேசினார்.

    மீண்டும் தீவிர சோதனையில் இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....