Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'அவுங்க ஒரு தேவதை' பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு குறித்து நளினி நெகிழ்ச்சி பேச்சு!

    ‘அவுங்க ஒரு தேவதை’ பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு குறித்து நளினி நெகிழ்ச்சி பேச்சு!

    பிரியங்கா காந்தி ஒரு தேவதை தந்தைக்காக என்னிடம் அவர் அழுதார் என கொலை வழக்கில் இருந்து வெளிவந்துள்ள நளினி தெரிவித்துள்ளார். 

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நேற்று முன்தினம் நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நளினி தனது சிறை அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், 

    “சதித்திட்டத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. எனது கணவரின் நண்பர்களுடன் பழகியதால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். நான் அந்த வழக்கில் குற்றவாளி இல்லை என எனக்கு தெரியும். ஆனால், என் மனதிற்கும் என மனசாட்சிக்கும் என்ன நடந்தது என்று தெரியும். 

    பிரதமரை கொள்ளும் சதி திட்டத்தில் நான் ஈடுபடவில்லை. சதி செய்த குழுவில் இருந்ததால் நான் குற்றம் சாட்டப்பட்டேன். அவர்கள் என் கணவரின் நண்பர்கள். அதனால் தான் அவர்ளுடன் நான் பழகினேன். நான் யாரிடமும் பொதுவாக பேசமாட்டேன். 

    இதையும் படிங்க: ‘என் மனைவிக்கு ஆதரவு அளியுங்கள்’ – தேர்தல் பிரசாரத்தில் ரவீந்திர ஜடேஜா

    கடை, திரையரங்கு, கோயில், ஹோட்டல் போன்ற இடங்களுக்கு செல்லுகையில் தேவைப்படும் போது அவர்களுக்கு உதவி செய்தேன். நான் அவர்களுடன் செல்வது வழக்கம். அவ்வளவுதானே தவிர வேறு எந்த தனிப்பட்ட தொடர்பும் எனக்கு கிடையாது. அவர்கள் குடும்பமும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட எனக்கு தெரியாது” என குறிப்பிட்டார். 

    அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறித்து பேசிய நளினி,  “எந்த நேரத்திலும் தூக்கில் போடலாம் என எதிர்பார்த்தேன். 7 முறை தூக்கில்போடுவதற்காக தயாரானேன். ஏழுமுறை மரண தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காந்திருந்தார்கள்” என கூறினார். 

    தொடர்ந்து பிரியங்கா காந்தி குறித்து பேசிய நளினி, “அவர் மிக அன்பானவர். அவர் ஒரு தேவதை. என்னை நானே மதிக்கும்படி செய்தவர் தான் அவர். காரணம் நாங்கள் சிறையில் சரியாக நடத்தப்படவில்லை. அதிகாரிகள் முன்பாக நாங்கள் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. நின்று தான் பேச வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

    ஆனால், பிரியங்கா காந்தி என்னை சந்திக்க வந்ததும் என்னை தன் அருகில் உட்கார சொன்னார். அப்போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தந்தையின் கொலையைப் பற்றி என்னிடம் கேட்டறிந்தார். மேலும் அவருக்காக அழுதார்” என நளினி தெரிவித்தார். 

    லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரித்ராவுடன் சேர்வது குறித்து பேசிய நளினி, “அவள் என்னை முழுவதுமாக மறந்துவிட்டாள். நான் தான் அவரை பெற்றேன். இருப்பினும் 2 வயதுக்கு பின் அவரை பிரிந்தேன். அதனால் அவர் நான் யார் என்பதை முழுவதுமாக மறந்துவிட்டாள். இதனால் தற்போது நடந்ததை மீட்டெடுக்க முயற்சி செய்கிறோம். 

    நானும் அவரும்(நளினியின் கணவர்) மிக கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு வயதாககிவிட்டது. இப்போது எங்களால் புரிந்து கொள்ள முடிக்கிறது. ஆனால், அவள் சிறியவள். என்ன நடக்கிறது என அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் அவள் மிகவும் சிரமப்படுகிறாள்” என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாள்: நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....