நடிகர் சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.
நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள பாந்திரா பேண்ட் ஸ்டான்ட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இந்தி திரையுலகில் பிரபலமான நடிகரும் இந்திய சினிமாவை மிகவும் பெயர் பெற்றவரும் ஆவார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கும், இவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் வந்து மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சல்மான் கான் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, இவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.
மிரட்டல் கடிதம் வந்ததன் காரணமாக, இந்த நடவடிக்கை மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டகாக கூறப்படுகிறது. இவரைப்போலவே நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கும் ‘எக்ஸ் பிரிவு’ பாதுகாப்பு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, நடிகர் சல்மான் கான் தற்போது அட்லீ கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நல்ல படம் தானாக விளம்பரப்படுத்திக்கொள்ளும்…நடிகர் அஜித் சொன்ன விஷயத்தால் கவலையில் ரசிகர்கள்