இந்திய திரையுலகில் பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்திய திரையுலகில் பிரபலமான கலை இயக்குநர்களுள் ஒருவர்தான், சுனில் பாபு. இவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் கலை இயக்கத்தில் பல வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளன.
அந்தவகையில், கஜினி, துப்பாக்கி, பிரேமம், பெங்களூர் டேஸ், எம்.எஸ்.தோனி, சீதா ராமம் போன்ற திரைப்படங்கள் அடங்கும். 100 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள சுனில் பாபுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுனில் பாபு காலமானார். இவருக்கு வயது 50. சுனிலின் இறப்பு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, திரையுலகினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தில் கலை இயக்குநராக சுனில் பாபு பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..