Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

    பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

    கேரளாவில் மந்தி பிரியாணி மற்றும் சிக்கனை சாப்பிட்ட செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர், செவிலியர் ரஷ்மி. இவர் கேரள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு, கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. 

    உணவை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    செவிலியர் ரஷ்மி சிகிச்சைப் பெற்றுவந்தாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரஷ்மி உயிரிழந்தார். 

    அப்போது, ரஷ்மி சாப்பிட்ட அதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, ரஷ்மி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். அதோடு உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த ஆண்டு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது – பிரபல இயக்குநர் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....