Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை; வலைவீசும் போலீசார்..

    புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை; வலைவீசும் போலீசார்..

    புதுச்சேரியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஓட ஓட விரட்டி ரவுடியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி கோபாலன்கடை பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ராஜா. தனது மோட்டார் சைக்கிளில் அம்மன்நகரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழி மறித்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

    இதில் அவர் சம்பவம் இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்தவுடன், வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து ராஜா உடலை கைப்பற்றி
    பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் கொலையானவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்ததும், அவருக்கு அம்சா (36) என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும், 1 ஆண் மகனும் உள்ளனர் என்பது தெரியவந்தது.

    நேற்று மாலை தனது வீட்டிலிருந்து பைக்கில் வரும் போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து மடக்கி சராமரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து சிதறி ஓடியது தெரியவந்தது. இவர் மீதுள்ள வழக்கிற்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்து இருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....