லடாக்கில் இரண்டாவது நாளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது, லடாக்கின் லே என்ற பகுயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், இன்று காலை 9.30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 ஆயிரத்துக்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு
இந்த நிலநடுக்கத்தை அடுத்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். எனினும், சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.