Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    ஒரே நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105 அடியை எட்டியுள்ளது. 

    கர்நாடக மாநிலம் மற்றும் கேரள வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 8-ம் தேதி முதல் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    மேலும், மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாள்களாகவே நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. 

    இந்நிலையில், காவிரி ஆற்றிலிருந்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.37 அடி உயர்ந்து, 105.81 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 75.57 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக அதிகரித்துள்ளது. 

    இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

    மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....