Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'ஆஸ்திரேலிய அணிக்கு தெளிவில்லை' - ஹர்பஜன் சிங் விமர்சனம்!

    ‘ஆஸ்திரேலிய அணிக்கு தெளிவில்லை’ – ஹர்பஜன் சிங் விமர்சனம்!

    இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தெளிவில்லாமல் இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 

    இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மனதளவில் பலவீனமானவர்கள் என்று இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

    அவர் மேலும் கூறியதாவது;

    இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தெளிவில்லாமல் இருக்கின்றனர். இதற்கு முன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியை தற்போது உள்ள அணியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தான் பலவீனமான அணியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

    அவர்கள் திறமை அடிப்படையில் மட்டும் அல்ல, மனரீதியாகவும் அவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். அவர்களால் அழுத்தத்தைக் கையாள முடிவதில்லை. இது நாங்கள் முன்பு பார்த்த அல்லது விளையாடிய ஆஸ்திரேலிய அணி அல்ல 

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 

    ஈரானில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு விஷம்… வெளிவந்த பகீர் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....