Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே நாளில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

    ஒரே நாளில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

    தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் நேற்று 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    இதில், முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 10 லட்சத்து 88 ஆயிரத்து 865 பேருக்கும் செலுத்தப்பட்டது. 

    தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக  95.23 சதவிகிதமும் 2-வது தவணையாக 87.25 சதவிகிதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

    மேலும், 12 முதல் 14 வயத்துக்கு உள்பட்டவர்களில் முதல் தவணையாக 18 லட்சத்து 94 ஆயிரத்து 484 பேருக்கும், 2-வது தவணையாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 217 பேருக்கும் செலுத்தப்பட்டது. அதேபோல், 15 முதல் 18 வயத்துக்கு உள்பட்டவர்களில் முதல் தவணையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேருக்கும், 2-வது தவணையாக 25 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....