தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில், ஒரு லட்சம் இடங்களில் நேற்று 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 10 லட்சத்து 88 ஆயிரத்து 865 பேருக்கும் செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 95.23 சதவிகிதமும் 2-வது தவணையாக 87.25 சதவிகிதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மேலும், 12 முதல் 14 வயத்துக்கு உள்பட்டவர்களில் முதல் தவணையாக 18 லட்சத்து 94 ஆயிரத்து 484 பேருக்கும், 2-வது தவணையாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 217 பேருக்கும் செலுத்தப்பட்டது. அதேபோல், 15 முதல் 18 வயத்துக்கு உள்பட்டவர்களில் முதல் தவணையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேருக்கும், 2-வது தவணையாக 25 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.