Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மறுத்த விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு

    மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மறுத்த விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்ட மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், சகோதரன் உடலுடன் சாலையோரம் சிறுவன் காத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரில் வசித்து வருபவர் பூஜாராம் ஜாதவ். இவருடைய 2 வயது மகன் ராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இவர்களுடன் 8 வயது மகன் குல்ஷனும் சென்றுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார்.

    ராஜா உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை தனது சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்குமாறு மருத்துவமனை ஊழியர்களிடம் பூஜாராம் கேட்டுள்ளார். ஆனால் பணமில்லாத காரணத்தால் பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டதாக பூஜாராம் கூறியுள்ளார்.

    இதனால் வேறு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு சென்ற பூஜாராம், இறந்துபோன தனது இரண்டு வயது மகனை, 8 வயது நிரம்பிய குல்ஷனிடம் விட்டுச் சென்றார்.

    சாலையோரமாக, இறந்த தனது சகோதரனின் உடலை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரமாக அமர்ந்திருந்த குல்ஷனின் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், குல்ஷன் மற்றும் இறந்து போன அவரது சகோதரர் ராஜாவை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் இடையூறுகளால் மருத்துவமனை நிர்வாகம், எந்த கட்டணமும் வசூலிக்காமல் பூஜாராமுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது.

    இதை சம்பவம் குறித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா கூறுகையில், ‘காணொளி குறித்து வெளியான தகவல் உண்மையில்ல. கிராமத்தில் இருந்து தினக்கூலி தொழிலாளி (பூஜாராம்) ஒருவர், தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது.

    ‘மருத்துவமனையில் சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர். அவர் (பூஜாராம்) சிறுவனின் மற்றொரு மகனிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது தான் இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வகிக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....