மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உட்பட 24 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் நோனே மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை துபூல் இரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் பாறைகள் சரிந்து இஜாய் ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதில், ஏராளாமான இராணுவ வீரர்களும் பணியார்களும் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் இதுவரை, 18 ராணுவ வீரர்களின் சடலங்கள் மற்றும் 6 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 12 இராணுவ வீரர்கள் மற்றும் 26 பொதுமக்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் இராணுவ வீரர்கள் ஆவர். 44 பேரின் நிலை என்ன ஆனது என்பது தகவல் தெரியவில்லை.
விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்ணில் புதையுண்ட வீரர்களைத் தேட ‘வால் ரேடார்’ கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேடுதல் பணியை விரைவுப்படுத்துவதற்கு இன்று காலை புதிய வீரர்கள் அடங்கிய மீட்புக்குழு ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், டெரிடோரியல் ஆர்மி, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5 பேர் பலி