Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குடியரசுத் தலைவர் தேர்தல்- திரௌபதி முர்மு சென்னை வருகை

    குடியரசுத் தலைவர் தேர்தல்- திரௌபதி முர்மு சென்னை வருகை

    தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர்  திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். 

    திரௌபதி முர்மு அனைத்து மாநிலங்களிலும் சென்று வாக்கு சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு சேகரிப்பதற்காக இன்று சென்னை வரவிருக்கிறார். 

    இன்று பிற்பகல் 3 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். 

     அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதேபோல், தமாகா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியிடமும் ஆதரவு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் அவர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். 

    இதனிடையே, திரௌபதி முர்முவை வரவேற்க பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

    ஆசிரியர்களை பணியமர்த்த மீண்டும் நெறிமுறைகள்- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....