அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனாலட் டிரம்ப், ஆபாச பட நடிகைக்கு கட்சி நிதியிலிருந்து பணம் எடுத்து கொடுத்துள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் அமெரிக்காவின் நீலப்பட சந்தையில் பிரபலமான நடிகையருள் ஒருவரான ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் திருமணத்துக்கு மீறிய ரகசிய உறவில் இருந்ததாகவும், அதை அந்த நடிகை வெளியே சொல்லாமல் இருக்க, அவருக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக டிரம்ப் பணம் கொடுத்ததாக கூறப்பட்டு வந்தது.
மேலும், அந்த நடிகைக்கு கொடுக்கப்பட்ட பணமானது 2016-ஆம் ஆண்டு கட்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுத்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 2018-ஆம் ஆண்டு இது சார்ந்த குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டு குறித்து நியூயார்க்கின் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரணை நடந்து வந்த நிலையில், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் தாய்மார்களுக்காக புதிய முயற்சி..