Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரு சிக்கன் பிரியாணிக்காக ஓட்டலையே கொளுத்திய நபர்? கோபக்கார கஸ்டமரின் வைரல் வீடியோ

    ஒரு சிக்கன் பிரியாணிக்காக ஓட்டலையே கொளுத்திய நபர்? கோபக்கார கஸ்டமரின் வைரல் வீடியோ

    சிக்கன் பிரியாணிக்கு பதில் வேறு உணவை கொடுத்ததால உணவகத்திற்கு ஒருவர் தீ வைத்துள்ளார். 

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குயீன்ஸ் பரோ என்ற பகுதியில் வங்கதேச உணவகம் ஒன்று இருக்கிறது. இந்த உணவகத்தில் சோபெல் நோர்பு என்ற 49 வயது நபர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு பிரியாணிக்கு பதிலாக வேறு ஒரு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடைக்கு அவர்தான் தீ வைத்தார் என்று குற்றச்சாட்டு முன் வைத்தனர். 

    ஆனால், நோர்பு  இதை மறுத்துவிட்டார். இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த வீடியோவில், சந்தேக நபர் ஒருவர் கருப்பு நிற ஹூடி, ஜீன்ஸ் அணிந்து வருகிறார். அப்போது, அவர் தன் கையில் இருந்த கேனில் உள்ள திரவத்தை ஊற்றி நெருப்பு வைக்கிறார். பின்னர் அங்கிருந்து ஓடுகிறார். 

    ஓடுபவர் யாரென்று பார்த்தால், நான் இல்லை என்று மறுத்த நோர்புதான். இதன்பின், 10 நாட்களாக தலைமறைவான நோர்புவை காவல்துறை பிடித்தனர். அவர் மீது கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: வங்கதேசத்துக்குச் செல்லும் இந்திய அணி; வெளிவந்த அட்டவணை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....