சிக்கன் பிரியாணிக்கு பதில் வேறு உணவை கொடுத்ததால உணவகத்திற்கு ஒருவர் தீ வைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குயீன்ஸ் பரோ என்ற பகுதியில் வங்கதேச உணவகம் ஒன்று இருக்கிறது. இந்த உணவகத்தில் சோபெல் நோர்பு என்ற 49 வயது நபர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு பிரியாணிக்கு பதிலாக வேறு ஒரு உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கடைக்கு அவர்தான் தீ வைத்தார் என்று குற்றச்சாட்டு முன் வைத்தனர்.
ஆனால், நோர்பு இதை மறுத்துவிட்டார். இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த வீடியோவில், சந்தேக நபர் ஒருவர் கருப்பு நிற ஹூடி, ஜீன்ஸ் அணிந்து வருகிறார். அப்போது, அவர் தன் கையில் இருந்த கேனில் உள்ள திரவத்தை ஊற்றி நெருப்பு வைக்கிறார். பின்னர் அங்கிருந்து ஓடுகிறார்.
“A Queens man set a #Bangladeshi restaurant on #fire in a wild caught-on-video arson he told cops he committed because the eatery botched his order of the savory rice dish(chicken biryani), according to court records.”#NewYork #USA #Bangladesh pic.twitter.com/PkzxracIUg
— Siraj Noorani (@sirajnoorani) October 18, 2022
ஓடுபவர் யாரென்று பார்த்தால், நான் இல்லை என்று மறுத்த நோர்புதான். இதன்பின், 10 நாட்களாக தலைமறைவான நோர்புவை காவல்துறை பிடித்தனர். அவர் மீது கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வங்கதேசத்துக்குச் செல்லும் இந்திய அணி; வெளிவந்த அட்டவணை…