Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகர விளக்கு பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு

    மகர விளக்கு பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு

    மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இதைத்தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்று இரவே பூஜை முடிந்ததும் நடை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

    இன்றைய தினம் சாமியை தரிசிக்க 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் எப்போதும் போல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் மற்றும் கலச பூஜை நடைபெறும்.

    பிறகு மதியம் 1.30 மணி அளவில் நடை சாத்தப்படும். அதன் பின்பு மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 

    மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.

    பொங்கல் தொகுப்பு எப்படி? மாநில அந்தஸ்து நிலைப்பாடு என்ன? – பதிலளித்த முதலமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....