Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காதல் டூ கல்யாணம்: இனி ஆதியும் நிக்கி கல்ராணியும் தம்பதிகள்!

    காதல் டூ கல்யாணம்: இனி ஆதியும் நிக்கி கல்ராணியும் தம்பதிகள்!

    எளிமையும் எதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தவர் ஆதி பினிஷெட்டி. இதேபோன்று, தனது அழகாலும் கல கலவென்ற பேச்சாலும் குறும்புகளாலும் மக்களை கவர்ந்தவர் நிக்கி கல்ராணி. இவர்கள் இருவருக்கும் வீட்டின் பெரியவர்கள் முன்னிலையிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையிலும், நேற்று சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

    2015-ல் ஆதியும் நிக்கி கல்ராணியும் இணைந்து நடித்த முதல் படம், யாகாவாராயினும் நா காக்க. இதற்கு அடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம், 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம். இதில் தான் இவர்களின் காதல் ஆரம்பமானது என்று கூட சொல்லலாம்.

    ஆம்! இப்படத்தில் இடம்பெற்ற நீ கவிதைகளா பாடல் காதலர்களின் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஆதி நிக்கியை ஒருதலையாக காதலித்திருப்பார். ஆனால், நிக்கிக்கு வேறுறொருவருடன் நிச்சயமாகி திருமணமும் நடந்துவிடும். அதன் பின்பே இந்த பாடல் ஒலிக்கும். அதுமட்டுமல்ல! இன்றளவும் பலரின் இதயங்களிலும் ஒலித்து கொண்டுதான் வருகிறது நீ கவிதைகளா….

    முதலில் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் சமூக வலைத்தளங்களில் கிசு கிசுவாக வந்தன. அதையும் தாண்டி, ஆதியும் நிக்கியும் அடிக்கடி ஒன்றாக வெளியே சுற்றிய புகைப்படங்களும் சிக்கின. ஆனால், இந்த வதந்திகளுக்கு இவர்கள் தரப்பில் இருந்து எந்த கருத்துகளும் வெளிவரவில்லை. இவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்ததே, இருவரும் காதலிக்கிறார்கள் என்று இன்னும் அதிகமாக பேச வைத்தது. 

    கடந்த மாத இறுதியில், இவர்கள் திடீரென்று தங்கள் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு தான் தெரிந்தது காதலித்து தான் வந்திருக்கிறார்கள் என்று. ஆதியும் நிக்கியும் இணைத்த எடுத்த நிச்சயதார்த்த வீடியோ காட்சிகளும் புகைப்படக் காட்சிகளும் இரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றதுள்ளது. அதற்கு முன் இவர்கள் நலங்கு வைக்கும் நிகிழ்ச்சியில் நடனம் ஆடிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. திருமண விழாவில் பல நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொண்டு தம்பதிகளான ஆதிக்கும் நிக்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....