Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை; சென்னையை சேர்ந்த கலைஞர் அசத்தல்!

    மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை; சென்னையை சேர்ந்த கலைஞர் அசத்தல்!

    சென்னையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் உலகின் மிகப்பெரிய மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். 

    சென்னையைச் சேர்ந்தவரான ப்ரீத்தி விஜய் தற்போது தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்து வருகிறார். முன்னாள் மென்பொருள் பொறியாளரான ப்ரீத்தி விஜய், ஓவியத்தின் மீது உள்ள காதலால் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு தற்போது அதில் கலைஞராக விளங்கி வருகிறார். அதைத்தொடர்ந்து இவர், தனது படைப்புகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் லாபம் ஈட்டி வருகிறார். 

    இந்நிலையில், இவர் மசாலா பொருள்களை வைத்து வண்ணத்துப்பூச்சி ஓவியத்தைச் வரைந்து கின்னஸ் உலக சாதனையை படைத்து உள்ளார். அதன்படி இவர் மஞ்சள், மிளகு, கிராம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த அழகான ஓவியத்தை வரைந்து உள்ளார். இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் உறுதி செய்து சாதனைக்கான பட்டியலில் இணைத்துள்ளது. 

    இயற்கைப் பொருட்களை வைத்து வேலை செய்வதில் தனக்கு ஆர்வம் என கூறும் ப்ரீத்தி விஜய், திடீரென தான் இந்த யோசனை தோன்றியதாகவும் கூறினார். 

    அதோடு, இந்த ஓவியத்தை தீட்ட ராட்சத துணி தனது சொந்த ஊரான சென்னையில் இருந்து வந்ததாகவும், அவர் ஓவியம் வரைந்ததற்கான பெயிண்ட் 11 பவுண்டுகள் மசாலா கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் ப்ரீத்தி விஜய் தெரிவித்தார்.  

    ‘ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவளிக்கும்’ – கமல்ஹாசன் அறிக்கை!    

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....