Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'கொலை செய்ய பத்து முறை திட்டமிட்டேன்' - வாக்குமூலம் அளித்த கிரீஷ்மா

    ‘கொலை செய்ய பத்து முறை திட்டமிட்டேன்’ – வாக்குமூலம் அளித்த கிரீஷ்மா

    காதலனை 10 முறை கொலை செய்ய முயன்றதாக காதலி கிரீஷ்மா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷரோன் கடந்த அக்டோபார் மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி ஷரோனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

    இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அவரது காதலி  கிரீஷ்மா ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக்கொள்ளவே, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட பின் கிரீஷ்மாவை, கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல காவல்துறை திட்டமிட்டது. இந்நிலையில், அவர் தற்கொலைக்கு முயலவே விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இதன் பின்பு, கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கிரீஷ்மாவை அவரது வீட்டில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஷரோனிற்கு எப்படி விஷம் கலந்து கொடுத்தார் என்பதை இவர் நடித்துக்காட்டியுள்ளார். இதை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்துக்கொண்டனர். மேலும், நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி, கிரீஷ்மா கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று ‘ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    இந்நிலையில், ஷரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூர் பகுதிக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், 2 மாதங்களில் ஷரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த தகவல் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

    இதையும் படிங்கநடுரோட்டில் கண்டெய்னர் லாரியில் வந்த விமானம்! அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....