Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇப்படியும் ஒரு மகளா? தந்தைக்காக மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்

    இப்படியும் ஒரு மகளா? தந்தைக்காக மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்

    கேரளாவில் தனது தந்தைக்காக 17 வயது மகள் கல்லீரலில் உள்ள கொழுப்பை ஒரே மாதத்தில் கரைத்து தானமாக அளித்துள்ளார். 

    கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். இவருக்கு வயது 48. இவர் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்ததால், எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை மருத்துவ செலவு உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து பிரதீஷின் 17 வயதான மகள் நந்து, தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு வழங்க முடிவெடுத்தார். 

    இருப்பினும், அரசியல் அமைப்பு சட்டவிதிகளின்படி குழந்தைகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கூடாது. இதன் காரணமாக நந்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து சிறப்பு அனுமதியை பெற்றார். 

    இதையடுத்து நந்துவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரின் கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டறியப்பட்டது. தந்தையைக் காப்பாற்ற நந்து, தனது உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற்பயிற்சிகளையும் ஒரு மாதம் விடாமல் மேற்கொண்டு வந்தார்.

    இதைத்தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் நந்துவின் கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு கரைந்து, கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நந்துவின் கல்லீரலில் உள்ள ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தை பிரதீஷுக்கு பொருத்தப்பட்டது. 

    அறுவை சிகிச்சைக்கு பிறகு, தந்தையும் மகளும் தற்போது நலமுடன் இருக்கின்றனர். மேலும் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    தந்தைக்காக மகள் தனது 17 வயதில் செய்த இந்த கல்லீரல் தானம் கேட்போர் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 1,300 விமானங்கள் ரத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....