தமிழ் மெல்லச் சாகவில்லை வேகமாக செத்து வருவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக நடைபெறும் ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தொடங்கி இப்பயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.
தமிழைத் தேடி பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூரில், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் இருப்பதாகவும், அவர்கள் கலப்பு மொழியைத்தான் பேசுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் மெல்லச் சாகவில்லை; வேகமாக செத்து வருகிறது. லண்டலில் நுழைந்தால் பெயர் பலகை எவ்வாறு இருக்குமோ? அப்படித்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள்; ஆனால் தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்நது பேசிய ராமதாஸ், தமிழ் எங்கே இருக்கிறது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து 5 கோடி ரூபாய் தருவதாகவும், கருப்பு மையை எடுத்துக்கொண்டு தமிழ் மொழி தவிர வேறு மொழி எங்கு இருக்கிறதோ? அதை அழியுங்கள் என தெரிவித்தார். மேலும் தொலைபேசியை எடுத்தால் வணக்கம் என்று அழையுங்கள்; ஹலோ என்று சொல்லாதீர்கள் எனவும் கூறினார்.
இப்படியும் ஒரு மகளா? தந்தைக்காக மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்