Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'இத ஆயிரம் முறை எழுதுங்க' - குடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை!

    ‘இத ஆயிரம் முறை எழுதுங்க’ – குடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை!

    கேரளாவில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை கொடுத்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். 

    இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஓட்டிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி காவல்துறையினர் அறிவித்தனர். 

    அதன்படி திரிபுனித்துரா காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களை பிடித்தனர். மேலும் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனையும் வழங்கினர். 

    காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்களுக்கு பேப்பரையும் பேனாக்களையும் கொடுத்துவிட்டு தரையில் அமர வைத்து, ‘இனி நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி செல்ல மாட்டேன்’ என எழுதும்படி நூதன தண்டனை கொடுத்தனர். இதில் என்ன இருக்கிறது என்றால், அவர்கள் அதை ஒருமுறை எழுதவில்லை ஆயிரம் முறை எழுதியுள்ளனர்.  

    தனியார் பேருந்து ஓட்டுனர்கள் 12 பேருக்கும், கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர்கள் 2 பேருக்கும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் 2 பேருக்கும் இந்த நூதன தண்டனை வழங்கப்பட்டது. 

    வண்டலூர்: கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் – காவல்துறை வலைவீச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....