Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமணமேடையை விட்டு ஓட்டம் பிடித்த மணப்பெண்! வைரலாகும் வீடியோ பதிவு!

    மணமேடையை விட்டு ஓட்டம் பிடித்த மணப்பெண்! வைரலாகும் வீடியோ பதிவு!

    மணமகன் மணமகளுக்கு மாலை மாற்ற சென்ற போது, மணப்பெண் ஓட்டம் எடுத்து இருக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள மண்துருத்தி என்ற பகுதியைச் சேர்ந்த ஆணுக்கும் கல்லுநாகம் என்ற பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் உற்றார், உறவினர் முன்னிலையில், திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் இரட்டைக்குளக்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடந்துள்ளது. 

    தாலிக்கட்ட சிறிது நேரமே இருந்த நிலையில், மணமகன் மணமகளுக்கு மாலை மாற்ற சென்றுள்ளார். அப்போது, திடீரென மணப்பெண் மணமேடையில் இருந்து தப்பி ஓடி, மண்டபத்தில் உள்ள ஒரு அறைக்கு சென்று சட்டென்று கதவை அடைத்துக் கொண்டுள்ளார். பெற்றோர்கள், உறவினர்கள் வெகு நேரம் கதவை  தட்டியும் மணப்பெண் திறக்காமல் இருந்துள்ளார்.  இதனால், இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை, அறிந்து விரைந்து வந்த காவல் அதிகாரிகள் இரு குடும்பத்தையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

    அப்போது மணப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணப்பெண் வேறொரு நபரை விரும்புவதாகவும் பெற்றோர்களின் கட்டாயத்தால் தான் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் இருப்பினும் தன்னால், இந்த திருமணத்தை ஏற்க முடியாத காரணத்தினால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மணமகன் வீட்டார், நஷ்ட ஈடு கேட்டதில் வாக்குவாதம் எழுந்துள்ளது. பிறகு இரு வீட்டாரையும் சமாதானம் செய்து திருப்பி அனுப்பியுள்ளனர் காவல் துறையினர். 

    திருமணத்தின் போது அப்பெண் மணமேடையை விட்டு இறங்கி ஓடிய அந்த காணொளி காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சாதாரணமாகவே நம்ம நெட்டிசன்கள் வேறு ரகம். இப்போது இந்தச் சம்பவம் சிக்கி உள்ளதால், வேறு மாதிரி இதனை வைத்து செய்து வருகின்றனர். அந்த மணப்பெண், அப்போதாவது தைரியமாக ஒரு முடிவை தானாக எடுத்துள்ளார் என்று சந்தோஷப்படுவதா இல்லை, ஆசையாக இருந்த மணமகனின் நிலைமையை நினைத்து வருத்தப்படுவதா? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....