Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு; உடலை வாங்க உறிவினர்கள் ஒப்புதல்!

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு; உடலை வாங்க உறிவினர்கள் ஒப்புதல்!

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக சொல்லப்படும் ராஜாவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 

    சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்தப் பகுதி பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடம். இங்கு கடந்த 14 ஆம் தேதி இரவு கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த காரவடையான் ராஜா, செட்டிபட்டியை சேர்ந்த ரவி, இளையபெருமாள் ஆகியோர் படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

    இதையடுத்து, அங்கிருந்த மீனவர்கள் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

    இதனிடையே, காயம் அடைந்ததாக கூறப்படும் ராஜா, அவருடன் இருந்த இளையபெருமாள், ரவி ஆகிய மூவரும் மாயமாகினர். இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு இளையபெருமாள் மற்றும் ரவி ஆகியோர் வீடு திரும்பினர். இருப்பினும் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. 3 பேரும் மான் வேட்டையாட சென்றபோது சுற்றி வலைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படும் தமிழக மீனவரின் உடல் அடிப்பாலாறு ஆற்றில் கரை ஒதுங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதனிடையே ஈரோடு மாவட்ட பர்கூர் காவல்துறையினர் ராஜாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

    இந்நிலையில், கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த ராஜாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக சொல்லப்படும் ராஜாவின் உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

    சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....