Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; காவல்துறை செய்த அதிரடி

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; காவல்துறை செய்த அதிரடி

    திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு நபர்களை காவல்துறையினர் இன்று நீதிபதி முன்பு நிறுத்தினர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் 12 ஆம் தேதி அதிகாலைக்குள்ளாக 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் அங்குள்ள இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

    இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனையைத் தொடங்கினர். மேலும்  9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடகம், ஹரியானா உள்ளிட்ட மாநில எல்லைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல்துறையினர் ஹரியானா மாநிலத்தில் கைது செய்து விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். 

    இதனிடையே இன்று திருவண்ணாமலை நீதிமன்ற நீதிபதி முன்பு பிடிபட்ட இருவரும் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தெய்வீகன் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    தன்மையான சிலை, சிறகடிக்கும் பட்டாம்பூச்சி… அனுபமாவின் பிரத்யேக புகைப்படங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....