Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காந்தாரா இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு: ரஜினிகாந்த் பாராட்டு

    காந்தாரா இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு: ரஜினிகாந்த் பாராட்டு

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த ரிஷிப் ஷெட்டியின் கன்னடப்படமான காந்தாராவை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் .

    நிலம் மீட்பு,அதன் மீதான அதிகாரம் ,துரோகம் ஆகியவற்றை எதிர்க்கும் மக்களை பற்றிய கதையாக கன்னட மொழியில் வெளிவந்த காந்தாரா படம் கடந்த 30-ஆம் தேதி வெளியாகியது . ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

    பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதன் அடிப்படையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான காந்தாரா திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது .

    கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்ப்ளே நிறுவனம் தான் இந்த காந்தாரா திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் தற்போது
    188 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    கேஜிஎப் படத்துக்கு பிறகு உலக அளவில் அறியப்படும் கன்னடப்படமாக காந்தாரா படம் இருந்து வரும் நிலையில் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி பதிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி; சிக்கிய கடிதத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்” இதை விட சினிமாவில் யாரும் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. காந்தாரா படம் பார்க்கையில் என் உடல் சிலிர்த்துவிட்டது. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினிகாந்தின் பாராட்டுக்கு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக ,கன்னட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, ரஜினிகாந்த் சார். நீங்கள் இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு என் கனவை நனவாக்கியது மற்றும் இது போன்று கதைகளை இன்னும் உருவாக்கத் தூண்டுகிறது. நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் அவர்களை போலவே இப்படத்தை பார்த்த நடிகர்கள் தனுஷ் ,சிம்பு ,கார்த்தி ,பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஆகியோர் தங்களது பாராட்டுகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

    இதையும் படிங்க: சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு பிறப்பித்த அதிரடி உத்தரவு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....