Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆசிரியரின் சாதிப்பேச்சு: கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!

    ஆசிரியரின் சாதிப்பேச்சு: கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!

    பள்ளிகளில் மாணவர்கள் இடையே சாதி தொடர்பான மோதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதும், ஆசிரியர்கள் இதனை தீர்த்து வைப்பதும் வழக்கமானது தான். ஆனால், மாணவர்கள் இடையே சாதியைப் பற்றி பேசியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். ஆசிரியரின் இந்தப் பேச்சிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசனும், ஆசிரியரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூரில், அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை, பள்ளி மாணவர்கள் இடையே சாதி ரீதியாக பேசியுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக, கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே, கெட்டுப் போகச் செய்யலாமா? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து, அக்கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் கூறுகையில், அரசுப்பள்ளி ஆசிரியையின் இந்தப் பேச்சு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சாதிப்பற்றை களைக்க வேண்டிய ஆசிரியரே, சாதி வெறியைத் தூண்டும் விதமாக பேசியிருப்பது ஏற்புடையதல்ல. சாதியை இன்னமும் எடுக்கவில்லை எனில், எதிர்கால சமூகமே அழிந்து விடும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானாரா சோனியா காந்தி? – விளக்கமளித்த காங்கிரஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....