Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்தியன் படப்பிடிப்பின்போது நேர்ந்த மகத்தான சம்பவம்; பகிர்ந்த கமல்ஹாசன்!

    இந்தியன் படப்பிடிப்பின்போது நேர்ந்த மகத்தான சம்பவம்; பகிர்ந்த கமல்ஹாசன்!

    மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். 

    உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் இந்தியன். 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

    இதைத் தொடர்ந்து, சுமார்  24 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த  2019 ஆம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன்-2’ படபிடிப்பு கமலுடன் ஆரம்பித்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

    அதன் பிறகு, மீண்டும் இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், ‘25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில், அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். 

    கமல்ஹாசனின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ – சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....