Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது' - சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்..

    ‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ – சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்..

    பாராட்டுவதற்காக உற்சாகத்துடன் நான் பயன்படுத்திய வார்த்தைகள், சிலரின் மனதை காயப்படுத்தியுள்ளது என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். 

    கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காணாமல் போயினர். இதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான், 2018. 

    இயக்குநரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப், எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், டொவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், லால், இந்திரன்ஸ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படமானது, அடுத்த ஆண்டு (2023) வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்திய திரையுலகின் முக்கியமான திரை நட்சத்திரங்களுள் ஒருவரான மம்மூட்டி, ‘2018’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டார். 

    இந்த விழாவில் மம்மூட்டி பேசும்போது, “தலையில் குறைவான முடிகளே இருந்தாலும், ஜூட் ஆண்டனி தற்போதும் புத்திசாலியாகவே இருக்கிறார்” என்று கூறியிருந்தார். மம்மூட்டியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். 

    சமூகவலைதளத்தில் உருவக் கேலி செய்ததாக மம்மூட்டியை நெட்டிசன்கள் சாடியிருந்தனர். இந்நிலையில், தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகர் மம்மூட்டி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “அன்பானவர்களே! ‘2018’ டீசர் விழாவில் இயக்குநர் ஜூட் ஆண்டனியை பாராட்டுவதற்காக உற்சாகத்துடன் நான் பயன்படுத்திய வார்த்தைகள், சிலரின் மனதை காயப்படுத்தியுள்ளது. அதற்காக நான் வருந்துகிறேன. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு கவனமுடன் பார்த்துக்கொள்கிறேன். நினைவுப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

    மம்மூட்டியின் இந்த பதிவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    நான் உதயநிதியை சந்திக்கப் போறேன்’ – திரையரங்குகள் சர்ச்சை தொடர்பாக வாரிசு பட தயாரிப்பாளர் முடிவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....