Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜகவில் சேரவில்லை என்றால் முதல்வரின் புல்டோசர் தயார்- அமைச்சர் பேச்சால் எழுந்த சர்ச்சை

    பாஜகவில் சேரவில்லை என்றால் முதல்வரின் புல்டோசர் தயார்- அமைச்சர் பேச்சால் எழுந்த சர்ச்சை

    பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் இல்லை என்றால், முதல்வரின் புல்டோசர் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் விடுக்கும் தோரணையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    மத்திய பிரதேச மாநிலத்தில், தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் செயல்பட்டு வருகிறார். 

    இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக அமைச்சரான மகேந்திர சிங் சிசோசியா நேற்று ருதியா என்ற பகுதியில் நகராட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

    அப்போது அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக அமைச்சரான மகேந்திர சிங் சிசோசியா, காங்கிரஸ் கட்சி தொண்டர்களே கேளுங்கள்; பாஜகவில் இணைந்துவிடுங்கள் என்றும், இந்தப் பக்கம் (பாஜக) மெதுவாக வந்துவிடுங்கள் என்றும் கூறினார். மேலும் அவர், 2023 ஆம் ஆண்டும் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி தான் அமையப்போவதாகவும் முதல்வரின் புல்டோசர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

    இவ்வாறு, பாஜக அமைச்சர் மிரட்டல் விடுக்கும் தோரணையில் கூறியிருப்பது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி குடும்ப விழா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....