முகேஷ் அம்பானி குடும்ப வழக்கத்தின்படி அவரது மகனின் நிச்சயதார்த்த விழா மும்பையில் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்தியாவின் பணக்காரர்களுள் ஒருவர்தான், முகேஷ் அம்பானி. இவரின் இளையமகன் ஆனந்த் அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார். அதோடு, ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் ஆகிய ரிலையன்ஸின் இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டுடன் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு என்று சொல்லப்படும் முகேஷ் அம்பானியின் நவீன அரண்மனையான அண்டிலியாவில் நேற்று ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு நிச்சயதார்த்த விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் அம்பானி குடும்பத்தின் ஆடல் பாடலுடன் நடைபெற்றது.
ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று, என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது