Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலையின் புது அத்தியாயம்! ஏப்ரல் மாதம் தொடங்கப்போகும் நடைபயணம்

    அண்ணாமலையின் புது அத்தியாயம்! ஏப்ரல் மாதம் தொடங்கப்போகும் நடைபயணம்

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். 

    சித்திரை முதல்நாள் திருச்செந்தூரில் தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் 117 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தின் மூலம் தொகுதிவாரியான பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை அண்ணாமலை செய்ய உள்ளார். 

    தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று கூறி வருகிறது. அதற்கு முன்பாகவே 2024 ஆம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகும் என பாஜக கூறி வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களை முன்வைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று வரை புதுச்சேரி அரசியல் அதிகாரம் சுதந்திரம் அடையவில்லை – அன்பழகன் பேட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....