பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.
சித்திரை முதல்நாள் திருச்செந்தூரில் தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் 117 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தின் மூலம் தொகுதிவாரியான பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை அண்ணாமலை செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று கூறி வருகிறது. அதற்கு முன்பாகவே 2024 ஆம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகும் என பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களை முன்வைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை புதுச்சேரி அரசியல் அதிகாரம் சுதந்திரம் அடையவில்லை – அன்பழகன் பேட்டி!