அடுத்த ஆண்டு முதல் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களிடையே புகழ்பெற்றவை. குறிப்பாக, சொல்ல வேண்டுமானால் தயாரிப்பான பேபி பவுடர் உலகளவில் மிகவும் புகழ்பெற்றது.
இந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 100 ஆண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. மேலும், இந்நிறுவனம் பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், வருகிற 2023-ம் ஆண்டு முதல் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆம், சமீப காலமாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இது சார்ந்து, வட அமெரிக்காவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீது தொடரப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறவே மறுத்தது. மேலும், இந்த பவுடர் அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு பின்னரே விற்பனை செய்யப்படுவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், இந்த பேபி பவுடரின் விற்பனை சரிந்தது.
இதையடுத்து, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை அடுத்தாண்டு முதல் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது. அதே சமயம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எங்களது பவுடர் சுத்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்