மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் குறித்து மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தை அனுகவும்.