தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்காக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தமாக 30 காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், அதற்கான சம்பளமாக மாதம் ரூ.60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு 32-ஆக விதிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியாக, சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் (LAT-2022 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CLAT-2022 நுழைவுத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விண்ணப்பத்தாரின் சட்ட அறிவு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்களுக்கு www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.