Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை; அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்

    ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை; அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்

    தமிழக சட்டமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினர். 

    அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் விஷயத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்பட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர் 

    அதற்கு அப்பாவு, அவை தொடங்கியதும் உரிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், அவை தொடங்கியதும் நீர்வளத்துறை துரைமுருகன் உரையை ஆரம்பித்தார். 

    அப்போது குறுக்கிட்டு எதிர்க்கட்சி துணை தலைவர் விஷயத்தில் உரிய முடிவு எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரை சமாதனப்படுத்த சபாநாயகர் அப்பாவு முயற்சி செய்தார். இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இதற்கு அப்பாவு கேள்வி நேரம் முடிந்த பிறகு, எதிர்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படுவார் என தெரிவித்தார். அதையும் ஏற்காமல், அதிமுவினர் அமளியில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து எடப்பாடி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சட்டமன்றத்திலிருந்து எடப்பாடி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். 

    அவையின் மாண்பை குலைக்க திட்டமிட்டு இப்படி செய்து வருகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எதற்கோ பயந்து பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களின் பேச்சுகள் அவை குறிப்பில் இடம்பெறாது. இந்தி திணிப்பு எதிர்ப்பு மசோதா, ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. இதில் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என்பதால் இதைப்பார்த்து பயந்து அமளியில் ஈடுபட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். 

    இதையும் படிங்க: நாகர்கோயில் காசி வழக்கில் புதிய திருப்பம்; குவைத்திலிருந்து ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட நண்பன் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....