Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நிறைவடைந்ததா அஜித்குமாரின் துணிவு...சுடச்சுட வெளிவந்த அப்டேட்!

    நிறைவடைந்ததா அஜித்குமாரின் துணிவு…சுடச்சுட வெளிவந்த அப்டேட்!

    நடிகர் அஜித்குமார் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் படப்படிப்புகள் இன்றுடன் நிறைவடைகிறது.

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் மும்மரமாக நடந்துவந்தது. 

    இதையும் படிங்க:சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: நாம் செய்ய வேண்டியது என்ன?

    இதையடுத்து, சிறிது நாள்கள் படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டது. இச்சூழலில்தான், கடந்த மாதம் 23-ம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றார். தொடர்ந்து 18 நாட்களாக தாய்லாந்தில் துணிவு படப்பிடிப்பானது நிகழ்ந்து வருகிறது. 

    இந்நிலையில், இன்றுடன் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், பொங்கல் திருவிழா அன்று துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக, பொங்கல் திருவிழா அன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....