இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது .
இந்தியாவின் அந்நிய செலாவணி 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 642 பில்லியன் டாலராக உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன்பின் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அந்நிய செலாவணியானது தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 16-ம் தேதி வரையில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பானது 545 பில்லியன் டாலராகும். இந்த மதிப்பானது, 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த அளவாகும்.
தற்போது இந்தியாவிடம் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்து வெறும் 9 மாதங்களுக்கு மட்டுமே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இந்தியா அந்நிய செலாவணி நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்களும் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எதிர்கட்சித் தலைவரின் அறிக்கையை பார்த்து அழுவதா? சிரிப்பதா?