Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎழும்பூரில் வாகன சோதனை..சிக்கிய நாணய மூட்டைகள்; இப்படியொன்று இருக்கிறதா?

    எழும்பூரில் வாகன சோதனை..சிக்கிய நாணய மூட்டைகள்; இப்படியொன்று இருக்கிறதா?

    எழும்பூரில் வாகன சோதனையில் மலேசிய நாட்டு நாணயங்கள் 25 மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது. 

    சென்னை எழும்பூரில் எப்போதும் போல நேற்று முன்தின இரவு காவல்துறையால் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையானது  உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் நடத்தப்பட்டது. 

    இந்தச் சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதில், வேகமாக வந்த வாகனத்தை (வேன்) மடக்கி காவல்துறை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் மூட்டை, மூட்டையாக மலேசிய நாட்டு நாணயங்கள் இருந்தன. 25 மூட்டை நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேதம் அடைந்த அந்த நாணயங்களை உருக்கி விற்பனை செய்ய முடிவு செய்து வாங்கி வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.  

    வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை முடிந்த பிறகு இதில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு தெரியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க : நெருங்கி வரும் ஆபத்து! மீண்டு வருமா இந்தியா? மிரட்டும் அந்நிய செலாவணி கையிருப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....