Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பையை வெல்லப்போவது 'இந்தியா' தான்! ஏபிடிவில்லியர்ஸ் நம்பிக்கை

    டி20 உலகக் கோப்பையை வெல்லப்போவது ‘இந்தியா’ தான்! ஏபிடிவில்லியர்ஸ் நம்பிக்கை

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்லுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபிடிவில்வியர்ஸ் தெரிவித்துள்ளார். 

    ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபிடிவில்வியர்ஸ், நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து மனம் திறந்துள்ளார். 

    ஏபிடிவில்வியர்ஸ் தெரிவித்துள்ளதாவது: 

    தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் என கருதுகிறேன். மேலும், அந்தப் போட்டியிலும் இந்திய அணி வென்று உலகக் கோப்பையை கைப்பற்றும். 

    இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி போன்ற பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டரை இந்தியா கொண்டுள்ளது. அதேபோல, இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையான வீரர்களாக உள்ளனர். அதனால், இந்தியா கோப்பையை வெல்லும். 

    இவ்வாறு  ஏபிடிவில்வியர்ஸ் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, தென்னாப்பிரிக்க அணி ‘சூப்பர்-12’ சுற்றில் 5 புள்ளிகளுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: சானியா மிர்சா-வின் திருமண வாழ்வில் நடந்துக்கொண்டிருப்பது என்ன? – குழப்பத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....