இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது.
இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து களமிறங்கியுள்ளது.
இந்திய அணி வென்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். இந்திய அணி வெற்றிப் பெறும் முனைப்பிலும், இலங்கை அணி தோல்வியை தவிர்க்கும் வகையிலும் தற்போது விளையாடி வருகிறது.
சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலி