இந்தியா மற்றும் இலங்கை அணி மோதும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.
கடந்த 3-ஆம் தேதி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது இருபது ஓவர் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றால் தொடரைக் கைப்பற்றிவிடும். ஆதலால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இன்றைய போட்டியில் தோற்றால் இருபது ஓவர் தொடரை இழக்க நேரும் என்பதால் இலங்கை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய ஆட்டம் அமர்க்களமாக இருக்க அநேக வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய போட்டியானது புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்க உள்ளது.
வாரிசும் துணிவும் நேருக்கு நேர் மோதல்; வெல்லப் போவது யார்?