முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகண நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளன.
இந்த ஆண்டு நிகழவிருக்கும் கிரகணங்கள் குறித்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள அரசு ஜிவாஜி வானியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் நடைபெற இருப்பதாக தெரிவித்த ராஜேந்திர பிரகாஷ் குப்தா, இதில் 2 கிரகண நிகழ்வுகளை மட்டுமே இந்தியாவில் காண முடியும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என்றும் இதனை இந்தியாவில் காண முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் சந்திர கிரகண நிகழ்வு நடைபெறும் என்றும், இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியும் என்றும் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அக்டோபர் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வளைய சூரிய கிரகண நிகழ்வு நடைபெறும். இந்தச் சமயம் இந்தியாவில் இரவு என்பதால் அந்த நிகழ்வை காண முடியாது. இதே அக்டோபர் மாதத்தில் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நிகழும் பகுதியளவு சந்திர கிரகணத்தை இந்தியாவில் காண முடியும் என ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘சிவா சிவா’ முழக்கத்துடன் தேரோட்ட கொண்டாட்டம்