அஜித்குமாரின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது.
இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா தான்.
அந்த வகையில் தற்போது, விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் உருவாகியுள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகுமென்று கடந்த மூன்று மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு படக்குழுவும் பொங்கலுக்கு தங்களது படம் திரைக்கு வருவதாக அறிவித்தன. ஆனால், தேதியை எந்த படக்குழுவும் குறிப்பிட்டு சொல்லாமல் இருந்து வந்தது. இதனால், பல்வேறு யூகங்கள் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களுக்கு இடையவும் நிலவின்.
சில நாட்களுக்கு முன்பு இரு திரைப்படங்களும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகுமென ஒரு தகவல் பரவியது. ஆனால், சினிமா வட்டாரங்கள் ஒரு படம் முன்னும், இன்னொரு படம் பின்னும் வெளியாகுமென தெரிவித்தனர்.
அந்த வகையில் நேற்று துணிவு படக்குழு, தங்கள் திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்தனர். இதனால், வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே வாரிசு படக்குழுவும், தங்களது படத்தை ஜனவரி 11-ஆம் தேதி வெளியீடுவதாக அறிவித்துள்ளனர்.
இதனால், இரு திரைப்படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதப்போவது உறுதியாகவிட்டது. துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களின் டிரெய்லரும் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
குடும்பம் + தாய்பாசம்… வாரிசு டிரெய்லர் எப்படி இருக்கு? – ரசிகர்கள் கணிப்பு சரியா..
கழுத்தளவு குழியில் விவசாயி வித்தியாசமான போராட்டம்; எதற்கு தெரியுமா?