இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் சூப்பர்-12 சுற்றுகள் தொடங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற 8 அணிகள் ஏற்கனவே சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தன.
இந்நிலையில், மீதமுள்ள 4 அணிகளுக்காக 8 அணிகள் மோதின. இந்நிலையில், தகுதிச்சுற்றில் விளையாடிய 8 அணிகளில் இருந்து, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதிப்பெற்றன. இந்த பன்னிரண்டு அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 அணிகள் ;
குரூப் 1 – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து.
குரூப் 2 – இந்தியா, வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே
இந்திய அணி போட்டிகள் ;
முதல் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் இன்று (அக்டோபர் 23-ம் தேதி) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இரண்டாம் போட்டி – சிட்னி மைதானத்தில் அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவுக்கும், நெதர்லாந்துக்கும் இடையே மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
மூன்றாம் போட்டி – பெர்த் மைதானத்தில் அக்டோபர் 30-ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே மாலை 4.30 மணியளவில் நடைபெறும்.
நான்காம் போட்டி – அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2-ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெறும்.
ஐந்தாம் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 6-ம் தேதி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சிட்னி, அடிலெய்ட் நகரங்களில் நடைபெறும் அரையிறுதி மற்றும் மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டங்கள் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?’ – ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?