நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளதால் தயவு செய்து தீபவாளி அன்று அதிக பட்டாசு வெடியுங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:
தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்தது என்று கேட்டால் பதில் இல்லை; மேயர்கள் பேசும் தமிழை கொஞ்சம் கேட்டு பாருங்கள். இந்தியில் மருத்தவபடிப்பை கொடுக்க எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை.
திமுக நடத்தும் பள்ளிகளை பற்றியும், அதில் இந்தி கற்றுக் கொடுக்கிறது என்பதை பற்றியும் 27ம் தேதி சொல்வோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஏன் உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெயலலிதா மரணவிவகாரத்தில் ராதாகிருஷ்ணன் மீது அரசியல் பார்வை கூடாது; அப்படி செய்தால் யாரும் தைரியமாக பணியாற்ற முடியாது.
தீபாவளியன்று அதிக பட்டாசு வெடியுங்கள். நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளதால் தீபாவளி அன்று தயவுசெய்து அதிக பட்டாசு வெடியுங்கள்.ஒரு நாள் பட்டாசு வெடித்தால் பெரிய அளவுக்கு மாசு வராது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் தீவிர பயிற்சி; வைரலாகும் புகைப்படங்கள்!