Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?' - ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?

    ‘பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?’ – ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?

    பாகிஸ்தான் பயணம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். 

    ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்றுகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் முடிவுபெற்ற நிலையில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. 

    இதைத்தொடர்ந்து, நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாகிஸ்தானிற்கு சென்று இந்திய அணி விளையாடுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும், நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பற்றி மட்டுமே தற்போது நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், பாகிஸ்தான் பயணம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். 

    இதையும் படிங்க: சென்னையிலிருந்து 1.65 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....